×

அம்மாபாளையத்தில் பாறைக்குழியில் பயங்கர தீ விபத்து

திருப்பூர், ஏப்.14: அம்மாபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் – அவினாசி சாலை, அம்மாபாளையத்தில் குப்பைகள் கொட்டும் பாறைக்குழி உள்ளது. குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தற்போது அங்கு குப்பை கொட்டப்படுவதில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு குப்பைகள் கொட்டப்பட்ட பாறைக்குழியில் தீப்பற்றி எரிவதாக திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்புதுறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் யாராவது தீ வைத்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கும் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அம்மாபாளையத்தில் பாறைக்குழியில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Ammapalayam ,Tirupur ,Avinasi Road ,Garbage ,Ammapalayam… ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி